Total Pageviews

Thursday 24 April 2014

HEALTH TIPS

காலை உணவு


காலை உனவை அரசனைப் போலவும் மதிய உணவை, இளவரசனைப் போலவும் இரவு உணவை, ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும். காலையில் சாப்பிடுகிற உணவு பகல் நேரத்தில் எரிக்கப்பட்டு கலோரி சக்திகளாக மாறுகின்றன. நாம் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இரவு நேரம் முழுவதும் நமது உடலின் எந்த உணவும் இல்லாமல் இருக்கிறோம். இரவு தூக்கத்திற்கு பின்னர் நாம் சாப்பிடுகிற காலை உணவில் கார்போ ஹைட்ரேட்டுகள் நார்சத்து மற்றும் புரதம், குறைந்த கொழுப்பு வகை உணவுகள் கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும்.
கார்போ ஹைட்ரேட்டுகள் சக்தியை மெதுவாக வெளியிடுகின்றன. காலை உணவுடன் பழவகையையும் சேர்த்துக் கொள்வது நல்லது ஒரு நாளின் 3 ல் ஒரு பகுதி ஊட்டச் சத்தை காலை உணவு தருகிறது. காலை உணவில் வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘டி’ இரும்புச் சத்து, நார்சத்து வகை உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸ் தேவைப்படுகிறது. நாம் காலை உணவை புறக்கணிக்கும் போது குளுக்கோஸ் அளவை சீராக கடைபிடிக்க உடல் நச்சுத்தன்மை அடைகிறது. காலையில் நாம் சாப்பிடுகிற உணவு மன ஒருமைப் பாட்டை அதிகரிக்கிறது. பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் திறனையும் பெறுகிறது. அதேப் போன்று மூளைத் திறன் செயல்பாடு, குழந்தைகளின் மன நிலை, ஆகியவற்றுக்கும் காலை உணவு காரணமாக அமைகிறது.
காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் எடையை குறைக்கலாம் என சிலர் கருதுகிறார்கள். இது உண்மையல்ல உணவுகளை அடிக்கடி தவிர்ப்பதால் பின்னர் அதிகம் சாப்பிடக் கூடிய தன்மையை ஏற்படுத்தி விடலாம். காலை உணவு இட்லி/ரவா இட்லி/ தோசை மற்றும் சாம்பாருடன் இருக்கலாம். பிரெட்/முட்டை , பால், சப்பாத்தி பருப்புடன் சாப்பிடலாம் அல்லது ராகி கூழை பாலுடன் சாப்பிடலாம். ராகி தோசை சாப்பிடலாம், ராகி ரொட்டி மற்றும் பாலுடன் சாப்பிடலாம்.
தினமும், சத்து மிக்க காலை உணவை எடுத்துக் கொள்வதால் அன்றைய தினம் சிறப்பான பொழுதை துவக்கலாம்.
************************

கீரையைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்
கீரைகளில் பலவிதமான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. சுமார் 5 மாதமாக சமைக்காத ஆகாரங்களை மாத்திரமே சாப்பிட்டு வருகிறேன். தினம்தோறும் ஒரு காயை ஏராளமான அளவு (எனக்கு தோன்றிய அளவு) உபயோகித்து வந்தேன். 5 மாதமாக சமைக்காத காய்கறியாக சாப்பிடுகிறேன். எனக்கு தேவைப்படும் கொஞ்சம் கீரைக்கு வார்தா கடைத் தெருவை எதிர்பார்ப்பது அக்கிரமம் என்று எனக்கு தோன்றியது.
ஒரு நாள் காலை ஆசிரமத்தில் வளர்ந்திருந்த கீரையை வார்தா ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீ சோட்டே லால்ஜி எனக்கு கொண்டு வந்தார். அது லூனிக்கீரை. அதைச் சாப்பிட்டு பார்த்தேன். எனக்கு ஒத்துக் கொண்டது. மற்றொரு நாள் அவர் சாக்வாட் என்ற கீரையை கொண்டு வந்தார். அதுவும் எனக்கு ஒத்துக் கொண்டது.
இவை கிடைத்த பிறகு சர்சாவ், சுவா கீரைகளையும் டர்னிப், காரட், முள்ளங்கி ஆகியவற்றின் உச்சியில் இருக்கும் இலைகளையும் பட்டாணி கடலை இலைகளையும் உபயோகிக்க ஆரம்பித்தேன். இந்த இலைகளையும் கிழங்குகளையும் சமைத்து சாப்பிடுவது என்பது பல விரயத்தோடு நல்ல ருசியையும் கொடுப்பதாகும். காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் சமைப்பதால் முற்றிலும் அல்லது ஒரு பகுதி வீணாகி விடுகின்றன. சமைக்காத பச்சைக் காய்க்கறிகளில் அவற்றின் இயற்கையான நல்ல சுவை இருக்கிறது. இலைகளை சமைப்பதால் நல்ல சுவை வீணாகிறது என்கிறேன்.
       ஹரிஜன் 15-2-1935 இதழில் அண்ணல் காந்தியடிகள்
** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
வலிப்பு வந்தால்
ஒருவருக்கு வலிப்பு நோய் தாக்கினால் அவர் கையில் இரும்புச் சாவியை தருவார்கள் இதனால் எந்த பலனும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால் மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும், வலிப்பு நோய் வர வாய்ப்புள்ளது. சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.
வலிப்பு வந்தவுடன் அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மாத்திரைகள் வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் மருந்து சாப்பிடத் தொடங்கிய ஓரிரு மாதங்களில் வலிப்பு வரவில்லை என்பதற்காக மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது மருத்துவர்கள் பரிசோதனை செய்து எப்போது நிறுத்த சொல்கிறார்களோ, அப்போது தான் நிறுத்த வேண்டும்.
********************************
அகத்திக் கீரை
கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள்களில் அகத்திக் கீரை மிகச் சிறந்தது ஆகும். ஒரு கைப்பிடி அகத்திக் கீரையில் உள்ள கால்சியம் அளவானது பத்து சிறிய கோப்பை பாலில் உள்ள கால்சியம் அளவிற்கு சமமானது. 20 முட்டையில் உள்ள கால்சியம் ஒரு கைப்பிடி அகத்திகீரையில் இருக்கிறது.
**** **** **** **** **** **** ***
அத்தி
       இந்தியாவில் ஈரப்பாங்கான இடத்தில் அத்தி மரம் உள்ளது இதன் இலைகள் கரும் பச்சை நிறத்தில் நீண்ட வட்ட வடிவில் இருக்கும் காயானது உருண்டை வடிவமாகவும் பச்சை நிறமாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
       இது உடலில் ரத்தத்தைப் பெருக்குவதற்கும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. ரத்த சோகை உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட, உடலுக்கு வலிமையைத் தரும். பழச்சக்கையை நன்கு உலர்த்தி இடித்து சூரணம் செய்து தினமும் இரு வேளை சாப்பிட நீரிழிவு, நீரிழிவால் ஏற்படும் தாகம், நாவறட்சி உடல் வெப்பம் மலக்கட்டு நீங்கும்  இதயத்தை பலப்படுத்தும்.
********************************




 வெள்ளரிக்காய் நீர்சத்து
 

உலக அளவில் வெள்ளரிக்காய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இது உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கிறது. இதில் வைட்டமின் ‘ஏ’ ‘சி’ உள்ளது. கால்சியம், பொட்டாசியம் சத்துக்களும் இருக்கின்றன. வெள்ளரிக்காய் தண்ணீர் பழமாகும். அதில் 95 % நீர்சத்து இருக்கிறது. வெள்ளரிக்காயின் தோல் நார்சத்து நிறைந்தது ஆகும்.
மேலும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நமது உடலில் ஏற்படும் நீர் இழப்பை வெள்ளரிக்காய் சரி செய்கிறது. கோடைகாலத்தில் ஏற்படும் எரிச்சலை தணிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெள்ளரிக்காய் அகற்றுகிறது. வெள்ளரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் சிறு நீரக கற்கள் கரைந்து விடும் என்பது பரவலாக அறியப்படுகிறது.
நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை குறைப்பதற்கு வெள்ளரிக்காய் உதவுகிறது. இதனால் சிறுநீரகங்கள் நல்ல முறையில் செயல்படுகின்றன. வெள்ளரிக்காயில் பெரும்பாலான வைட்டமின்கள் உள்ளன.
ஒரு நாளில் தேவைப்படும் வைட்டமின்கள் வெள்ளரிக்காயில் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ ‘பி’ ‘சி’ இருப்பதால் அது நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது. வெள்ளரிக்காய், கீரை மற்றும் கேரட்டை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல சத்து கிடைக்கிறது. வெள்ளரிக்காயை அரை நிமிடம் நாக்கில் வைத்திருந்தால் அதில் உள்ள பைட்டோ ரசாயனங்கள் கெட்ட சுவாசத்தை போக்குகின்றன.
வெள்ளரிக்காயில் ‘சிலிகா’ கனிமம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் தலைமுடியும் நகங்களும் பளபளப்பாக இருக்கின்றன. வெள்ளரிக்காயில் உள்ள கந்தகம், சிலிக்கா தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
************************** 


Health Tips
Water Melon Reduces B.P
 Water Melon could significantly reduce blood pressure. The pressure on the aorta (largest artery in the human body) and in the heart decreases after consuming water melon extract, says Arturo Figuero, an associate Professor at Florida state university.
More people die of heart attacks in cold weather because temperatures causes blood pressure to increase and the heart has to work harder to pump blood into the aorta. Consuming water melon had a positive impact on aortic blood pressure and other vascular parameters.
Notable study participants showed improvements in blood pressure and cardiac stress while both at rest and while they were exposed to the cold water when they consume watermelon.
That means less over load on the heart so works easily in a stressful situation such as cold exposure, Figueroa said in a paper published in the American journal of hyper tension.
********************




தர்பூசணி



     வெள்ளரிக்காயை போன்று தர்பூசணியில் நீர்சத்து இருக்கிறது. தர்பூசணியில் 99.5 சதவீதம் நீர்சத்து உள்ளது. இதில் வைட்டமின் ‘ஏ’ ‘சி’ பொட்டாசியம் தாதுக்கள் உள்ளன.

    இள நீரில் 95 சதவீதம் நீர்ச்சத்து, சர்க்கரை, பொட்டாசியம் உள்ளன. சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, தாமிரம் ஆகிய தாதுக்களும் உள்ளன. இளநீரில் வைட்டமின், பிளேவின், தயமின், நியாசின், பைரிடாக்சின் உள்ளன. சாத்துக்குடி, ஆரஞ்சில் பொட்டாசியம், சர்க்கரை, மாவுச்சத்து, வைட்டமின் ‘சி’ இரும்புச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளன. இவை தாகத்தை தணிப்பதற்கு உதவுகிறது.

    அன்னாசி பழத்தில் சர்க்கரை, நார்ச்சத்து உள்ளன.
திராட்சையில் சர்க்கரை, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ‘பி’, ‘சி’ உள்ளன.
*****************



கோடைக்கால வியர்க்குரு
கோடைகாலத்தில் வியர்க்குரு, வேனல் கட்டிகளும் தொல்லை தருகின்றன. வெயில் அதிகரிக்க தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேரும் அதனால் வியர்க்குரு வரும். தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேறாமல் வியர்க்குருவில் அழுக்கு போல தங்கி விடும். அப்போது பாக்டீரியா தொற்றிக்கொள்ளும் அந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டு புண்ணாகி விடும். இதுதான் வேனல் கட்டியாகும்.
இதனைத் தவிர்க்க வெயில் காலத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளை குளிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் துண்டை தண்ணீரில் நனைத்து உடலை அடிக்கடி துடைக்கலாம். வியர்க்குரு இடத்தில் பவுடர், சந்தனம் பூசலாம். வேனல் கட்டி குணமாக ஆண்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவர் யோசனைப்படி ஒரு வாரம் சாப்பிடலாம். 
*****************
நாய்க்கடிக்கு முதலுதவி
நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை சோப்பு  நீரால் கழுவ வேண்டும். காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும். காயத்திற்கு கட்டுப் போடக்கூடாது. ஆழமான காயம் என்றாலும் தையல் போட்டு காயத்தை மூடக் கூடாது. சுண்ணாம்பு சாம்பல் போன்றவற்றை காயம் உள்ள இடத்தில் தடவக் கூடாது அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும். நாய்கடித்து விட்டால் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.
**********************
மலச்சிக்கல் தவிர்க்க
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழங்களைத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். மன அழுத்தம், பயம், பதற்றம் போன்ற காரணங்களால் இளவயதில் மலச்சிக்கல் ஏற்படும். இதைக் குணப்படுத்த நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி, கோதுமை போன்ற தானிய உணவுகள், காரட், முள்ளிங்கி, பாகற்க்காய் அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பாசிப் பயறு , மொச்சை மற்றும் எல்லா வகைக் கீரைகள், ஆரஞ்சு, கொய்யா மாதுளை போன்றவற்றை சாப்பிட வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேனீர் குடிப்பதைக் குறைக்க வேண்டும். தினமும், நடைபயிற்சி, அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது.
*******************

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.