Total Pageviews

Thursday 3 July 2014

TAMIL ARTICLES



கல்வி
இன்றைக்கு மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று தங்களது வருகையை பதிவு செய்கிறார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். இன்றைக்கு மாணவர்கள் டிகிரி பட்டம் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இன்றைய உலகம் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை பெற்று இருக்கிறது.
டிகிரி பட்டம் என்பது மாணவர்களில் திறனை மதிப்பிடும் கருவியாக இருக்கிறது. பெறும் டிகிரியை மட்டும் பெற்றிருந்தால் வேலை கிடைத்துவிடும் என்பது அரிதாக இருக்கிறது. மாணவர்கள் பல்வேறு திறனையும் பெற வேண்டியுள்ளது. கல்வி மற்றும் வேலை முடிவுகளை நிர்ணயிக்கும் போது, அவர்களது பெற்றோர்கள் கூறுவதை சார்ந்தே இருக்கிறார்கள். அதனைப் போன்று கல்லூரி ஆசிரியர்கள் கூறும் வழியிலேயே மாணவர்கல உயர்கல்வி, வேலையைத் தேடுகிறார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆதிக்கத்தால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையை கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ பெற முடியாத நிலை உள்ளது.
மாணவரிகள் படிக்கும் கல்வியில் தாங்கள் விரும்பாத துறையை தேர்வு செய்யும் போது அதில் தடை ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் தாங்கள் படிப்பை நேசிப்புடன் படிக்க வேண்டும். இந்தியாவில் 125 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவீத்த்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர். மாணவர்கள் ஒழுங்கு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.
***********************

எ.டி.எம்களில் பணம் திருடும்
முயற்சியை தடுக்கும் தொழில்நுட்பம்

எ.டி.எம் களில் பணம் திருடும் கும்பல் இனிமேல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முடியாது. திருடர்கள், பணத்தை திருட முயற்சித்தால் ஏ.டி.எம்களில் உள்ள பணம் சேதம் அடைந்துவிடும். திருடர்கள் பணத்தை திருட முயற்சித்தால் எந்திரத்தில் இருந்து மை திடீரென வெளியே வரும்.
அந்த மை திருடர்கள் மீதோ அல்லது எடிஎம்களில் உள்ள பணத்தின் மீதோ படிந்துவிடும். இதனால் திருட முயற்சிக்கும் பணத்தை கண்டு பிடிப்பதற்கு அது உதவியாக இருக்கும் விஞ்ஞானிகள் இந்த திருட்டு தடுப்பு தொழில் நுட்பத்தை பாம்பார்டியர் வண்டின்( Bombardier beetle) தற்காப்பு நடவடிக்கை முறையில் இருந்து கண்டு பிடித்து இருக்கிறார்கள். தன்னை தாக்குபவர்கள் மீது இந்த வண்டுகள் கொதிக்கும் அமில வாயுவை செலுத்துகின்றன. இதற்கு அந்த வண்டு இரண்டு ரசாயனங்களை பயன்படுத்துகிறது. ஒன்று ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றொன்று ரசாயனம் ஹைட்ரோ குயினோன் ஆகும்.
இந்த ரசாயனங்களும் அந்த வண்டின் வயிற்றின் தனி அறைகளில் சேமிக்கப்பட்டு உள்ளது. இந்த இரு ரசாயனமும் கலக்கும் போது வெப்பம் உருவாகி அந்த திரவங்களை ஆவியாக்குகிறது.
****************************
சிஎன்ஜி எரிவாயு
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு(சிஎன்ஜி) பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. சிஎன்ஜி எரிவாயுவை சூடுபடுத்துதல், மற்றும் சமையல் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
இயற்கை எரிவாயு காற்றை விட மெலிதானது எனவே அது வெளியேறும்போது வேகமாக பரவக்கூடியது ஆகும். மற்ற எரி பொருள்களைக் காட்டிலும், இந்த சிஎன்ஜி எரிவாயு பாதுகாப்பானது ஆகும். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் 95 சதவீதம் மீத்தேனும் 5 சதவீதம் பியூட்டேன், புரோபேன், ஈத்தேன் மற்றும் இதர அரிய வகை வாயுக்கள் உள்ளன.
சிஎன்ஜி எரிவாயு திரவ இயற்கை வாயுவுடன் (எல்என்ஜி) இணைந்து குழப்பிக் கொள்ளப்படுகிறது. சிஎன்ஜி எரிவாயு உயர் அழுத்தத்தில் எரிவாயுவாக சேமிக்கப்படுகிறது. எல்என்ஜி எரிவாயு அழுத்தப்படாத திரவ வடிவத்தில் உள்ளது.
திரவ எரிவாயுவைத் தயாரிப்பதைக் காட்டிலும் சிஎன்ஜி எரிவாயுவை தயாரிப்பது மலிவானது ஆகும். இதற்கு மிகத் தீவிரமான குளிரூட்டி தேவைப்படாது. இருப்பினும் அதனைச் சேமித்து வைப்பதற்கு பெரிய சேமிப்பு கிடங்கு வசதி தேவைப்படும். இயற்கை எரிவாயு பூமியின் ஆழத்தில் காணப்படுகிறது. இது படிவ எரிபொருள் ஆகும். பல லட்சம் ஆண்டுகளில் பூமியில் அழுத்தப்பட்டு இயற்கை எரிவாயு உருவாக்கப்படுகிறது.
சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட எரிவாயுவைப் பெறுவதற்கு, எண்ணையை எடுப்பதற்கு, பூமியைக் குடைவது போன்ற முறையே செயல் படுத்தப்படுகிறது.

******************
புவி நாள் (ஏப்ரல் 22
புவி நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1970ம் ஆண்டு முதல் புவி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த புவி நாள் உலகலாவிய அளவில் அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு 192 நாடுகளால் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச் சூழலை பாதுகாக்கவே புவி நாள் அனுசரிக்கப்படுகிறது. மனிதனின் அஜாக்கிரதையால் பூமியின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பள்ளிக்கூடங்களிலும் இதர அமைப்புகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த பூமியில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. இந்த உயிரினங்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் வாழ, குறிப்பாக மனிதன் ஆரோக்யமாக வாழ சுற்றுச்சூழல் பாதிகாக்கப்பட வேண்டும்.
இந்த பூமி என்பது நம்முடைய இல்லம். நாம் இதனை மறந்து விட்டதாகவே தோன்றுகிறது. நாம் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதைப் போல இந்த புவியையும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.
பல நூறு ஆண்டுகளாக நாம் பூமியின் வளத்தை வாழ்வதாரம் அளிக்கும் வளத்தை சீரழித்து வருகிறோம். நாம் பூமியின் மீது அக்கறை காட்டாததால் உலக வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 
தொழிற்சாலை கழிவுகள் நாம் பயன்படுத்தும் நதியின் தூய்மையை பாழ்படுத்தி வருகின்றன. நவீன அறிவியல் யுகத்தில் நாம் இருக்கிறோம். இதனால் நாம் மோட்டார் வாகனங்களை எல்லாவற்றிற்கும் பயன் படுத்துகிறோம். இதனால், காற்றில் கரிம வாயு கலப்பு அதிகரித்து ஓசோன் மண்டலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
     வான் மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டால் சூரியனின், வெப்பக் கதிர்கள் நேரடியாக தாக்கும். நாகரிகம் முன்னேற, தொழில்துறையும் பெருகி விட்டது. இதனால் அதிக அளவில் வனப்பகுதிகளை அழித்து வருகிறோம். மரங்களை அதிக அளவில் வெட்டுவதால் மழைப்பொழிவது தடைபடுகிறது. உரிய கால கட்டத்தில் மழைப்பொழிவு இல்லாததால் பூமி வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டே போகிறது. நமது பூமியின் வட, தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள், கடுமையான வெப்பம்  காரணமாக வேகமாக உருகி வருகின்றன.
     துருவப் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் உருகி ஓடிவருவதால் கடல் நீர்மட்டம் உயருகிறது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பூமியின் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்களை நட வேண்டும். மரங்கள் வெட்டுவதை குறைக்க வேண்டும். மோட்டார் வாகனங்களை அவசியமான தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கலாம். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளையும் சேமிக்கலாம்.
     தேவையில்லாத போது, வீட்டில் மின்விளக்குகள் எரிய விடுவதை தவிர்க்க வேண்டும். மண்ணில் மக்கி போகாத பிளாஸ்டிக்குகளை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும், பூமியின் வாழ்வாதார வளத்தை பாதுகாப்பதாக இருக்கிறது. இதனை நினைவு படுத்தவே நாம் புவி தினம் கடைபிடிக்கிறோம்.
     இந்த புவியை பாதுகாக்க நாம் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பூமியில், 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்று பட்டு, செயல்படும் போது பூமியை நிச்சயம் பாதுகாக்க முடியும்.
இந்த பூமியில் மனிதர்கள் விலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. இந்த உயிரினங்களை பாதுகாக்க பூமியில் உள்ள ஆதார வளத்தை பாதுகாகக வேண்டும். 2014 ஆண்டு புவி நாளின் குறிக்கோள் பசுமை நகரங்கள் என்பதாகும். இன்றைக்கு உலக மக்களில் பாதிபேர் நகரங்களிலேயே வாழ்கிறார்கள்.
நகரப்பகுதிகளில் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பருவநிலை மாற்றமும் பாதிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். பருவ நிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் மின்சாரத்தை தயாரிக்க பழைய முறைகளே பயன்படுத்தப் படுகின்றன.
மின் உற்பத்திக்கு, சூரிய மின்சக்தி ( சோலார் எனர்ஜி) போன்றவற்றை பயன் படுத்த வேண்டும். கட்டிடங்களில் இருந்து வெளியேறும் பசுமை வாயுகள் 30 சதவீதத்திற்கும் மேலாக இருக்கின்றன. இதனை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பருவ நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் பசுங்கூட வாயுக்கள் அதிகரிப்புக்கு போக்குவரத்து வாகனங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தேவைக்கு மட்டும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
*******************

வெற்றி நிச்சயம்
இன்றைக்கு பல மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடங்குகிறார்கள். அதாவது அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ‘கல்வி’ Education- அது மிகப்பெரிய நிகழ்வு. அதற்கு முன்னால் நான் ஒரு வினாவைக் கேட்கிறேன்.
       காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து, தூய ஆடை உடுத்தி, காலணியை அணிந்து பள்ளிக்குப் புறப்படுகிறோம். இதெல்லாம் எதற்கு? பத்தாம் வகுப்பில் 500/500 மதிப்பெண் பெறவா? இல்லை பன்னிரண்டாம் வகுப்பில் 1200/1200 மதிப்பெண் பெறவா? அதையும் தாண்டி பொறியாளர் படிப்புக்கா? இல்லை மருத்துவப் படிப்புக்கா? இல்லை இலட்சக்கணக்கில் மாத ஊதியம் பெறுவதற்கா?
                           இதெல்லாம் அல்ல.....
                           ஒரு மாணவனின் அறிவு விரிவடைவதற்காக !...
                    அவன் வாழ்வில் வெற்றி பெறுவதற்காக.....
                    அவன் முன்னேற்றம் அடவதற்காகத் தான்.
                           அறிவு விரிவடைவதற்கு..... 

        இன்றைய குழந்தைக்கு அறிவு என்பது மிகவும் தாராளமான நிலையில் உள்ளது. ஒரு கட்டிடத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஐந்து அபிப்ராயம் தோன்றினால் அவர்களுக்கு ஐந்நூறு அபிப்ராயம் தோன்றும்.
       அவர்கள் பெரியவர்களா? இல்லை நீங்கள் பெரியவர்களா? ஆகவே, கல்வி என்பது மிகக் குறுகியதல்ல.
வெற்றி....
       வெற்றி என்பது மூன்றெழுத்துச் சொல். அதை அடைய வேண்டுமென்றால் வாழ்க்கையில் வெறி இருக்க வேண்டும். ஒருவன் வெற்றி பெற்ற பிறகு கைதட்டினால் அது பாராட்டு அல்ல; இவனால் வெற்றி பெற முடியும் என்று கைதட்டுவதுதான் உண்மையான பாராட்டு. அந்தப் பாராட்டை அனைத்து மாணவர்களும் பெற்றோர்களிடம் இருந்து தான் எதிர்பார்க்கிறார்கள்.
       ஒரு வீட்டில் ஒரு குழந்தையை, “ நீ படிக்கமாட்ட எதுக்குமே லாய்க்கில்ல” என்று பெற்றோர் கூறினார்கள் என்றால் அக்குழந்தை எப்படிப் படிக்கும்? உங்கள் குழந்தையை நீங்கள் தான் உற்சாகப்படுத்த வேண்டும். அவன் தடுக்கி விழும் பொழுது உங்கள் கைகளைக் கொடுத்து அவனை மேலே எழுப்ப வேண்டும்.
“எப்படியாவது மார்க் எடு, இல்ல அவ்ளோதான்!’ என்று சொல்வதை நிறுத்துங்கள்.
உன்னால் படிக்க முடியும், இந்த நாட்டை உயர்த்த முடியும் என்று சொல்லிப் பாருங்கள் அவன் தானாகப் படிப்பான்.
       ஒரு குழந்தை பெற்றோரை நம்பும் அளவிற்கு யாரையும் நம்பாது. உங்களுக்கு நினைவு இருக்கிறதா?  சிறுவயதில் ஒவ்வொருவரின் தந்தையும் அவர்கள் குழந்தைக்கு வேடிக்கை காட்டுவார்கள். குழந்தை சிரித்துக் கொண்டே மேலே போகும்...! ஏன்? கீழே இருக்கும் தன் தந்தை எப்படியாவது பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான். இந்த நம்பிக்கை கடைசி வரை நிலைக்க வேண்டுமா? பெற்றோர்களே! உங்கள் கைகளில்தான் உள்ளது.
       வீடுகளெல்லாம் பள்ளிகளாக மாற வேண்டும் பெற்றோர்களெல்லாம் ஆசிரியர்களாக மாற வேண்டும். இலட்சக்கணக்கில் சம்பாதிக்க வீட்டை IT Company’ ஆக மாற்றாதீர்கள்.. குழந்தையையும் சம்பாதிக்கும் நபராக நடத்தாதீர்கள்.
முன்னேற்றம்....
முன்னேற்றம் என்றால் என்ன? மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறுவதா? இல்லை விளையாட்டுத் துறைகளில் முத்திரை பதிப்பதா? கை நிறைய வருவாய் ஈட்டுவதா? இல்லை ..... முன்னேற்றம் என்பது அனைத்தையும் குறிக்க வேண்டும். ஒருவன் அனைத்துத் துறையிலும் முன்னேறினால்தான் அது முன்னேற்றம்.
இன்று ஒரு வீட்டில் ஒரு குழந்தை தான். அக்குழந்தையே அனைத்துத் துறையிலும் முத்திரை பதிக்க வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. அதனால் உங்கள் ஆசையை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
அவன் ஆசைக்கனவை நிறைவேற்றுங்கள் நீங்கள் உலகத்திற்கு அடையாளம் கூறலாம். இப்படிப் பெற்றோரையே குறை கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். நம்(மாணவர்கள்) மீதும் குற்றம் உண்டு. கடினப்பட்டு உழைத்து நம்மைப் புகழ் பெற்ற சி.இ.ஓ.ஏ பதின்மப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள் நம் பெற்றோர்கள். காரணம் தன் மகனும், மகளும் மாநிலத்திலே நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக. அவர்கள் கனவை நிறைவேற்றுவது யார்? நம்மில் சிலர் மட்டும் தானே!.
இன்றே முடிவெடுப்போம் அவர்கள் கனவை ஒவ்வொருவரும் நிறைவேற்றுவோம் என்று.... முயற்சி செய்வோம்; முத்திரை பதிப்போம்.
போட்டிகள் நிறைந்த உலகமா? இது......இல்லை
வாய்ப்புகள் நிறைந்த உலகம்............
       நீங்கள் தான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
       ஆசிரியர்களையெல்லாம் பெற்றோர்களாய்ப் பாருங்கள்.
பெற்றோர்களையெல்லாம் ஆசிரியர்களாய்ப் பாருங்கள்
வீடுகள் பள்ளிக்கூடமாய் மாறும்.
பள்ளிக்கூடம் வீடுகளாய் மாறும்.
சந்தனக்காற்று சன்னலோரம் வீசட்டும்

  

--- இரா. அப்துல் ஹக்கீம்

பத்தாம் வகுப்பு – ‘அ1




***************************************
நம்மால் முடியும் தம்பி
பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி
(
சி.  பள்ளி  மதுரை)
வெற்றிக்கான ஐந்து வழிகள்


  1.    தன்னம்பிக்கை 
  2.  மனஒருமைப்பாடு
  3.  செயல்
  4.  திட்டமிடல்
  5.  இலக்கு




    - வழங்கியவர் இ. சாமி தலைவர்,   சிஏ பள்ளி, மதுரை.


மதுரை கோசாகுளத்தில் மத்திய கலால் அதிகாரிகள் சங்க பள்ளி (சி) உள்ளதுஇந்த பள்ளி மாணவர்கள் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வுகளில் மாநில அளவிலும்மாவட்ட அளவிலும் மகத்தான சாதனை படைத்து வருகின்றனர்கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட இப்பள்ளிஇன்றைக்கு பல ஆயிரம் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய  வழிகாட்டி இருக்கிறது

டிசம்பர் 2, 2013 அன்று பள்ளியின் நூலக அரங்கில் 'நம்மால் முடியும்' என்ற தலைப்பில் பிளஸ் மாணவர்களுக்கான வழிகாட்டி உரையை  சி. ஏ பள்ளி தலைவர்  இசாமி வழங்கினார்அப்போதுஅவர் கூறியதாவதுஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற லட்சியம் மேற்கொள்வதே இலக்கு ஆகும்ஒரு காரியத்தை நீங்கள் செய்ய முடியும், நீங்கள் அடைய முடியும் நீங்கள் வெற்றி காண முடியும் என்பது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். 'வெற்றிஎன்ற நிலைக்கு ஏதேனும் பார்முலா இருக்கின்றதாநம் அனைவருக்கும் மிகச்சிறந்த அறிவுத்திறன் இருக்கிறது

இன்றைய இளைஞர்கள் மிகச்சீரிய திறன் பெற்றவர்களாவும் இருக்கிறார்கள். ஒரு இலக்கை அடைவதற்கு 5 வழிகள் உள்ளனஇறுதி இலக்கான வெற்றியை எட்டுவதற்குமொத்தம் 5 சிறிய வழிகளை கடைபிடிக்க வேண்டும்இலக்கை அடைவதற்கு முதலில் 'தன்னம்பிக்கைவேண்டும்ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை அடைய ஏதேனும் ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள்.

இலக்கை அடைய வேண்டும் என நினைப்பவர்களின் தற்போதைய நிலையில்அந்த திட்ட நிலைகளும்மாறுபட்டு இருக்கும்தினமும் 6 மணி நேரம் மட்டுமே தூங் வேண்டும் என, திட்டமிட்டால் அதன்படியே மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்துநமது பாடங்களை படிப்பதற்கு திட்டமிட வேண்டும்குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்பதைவெறும் எண்ணத்தில் மட்டுமே கருதாமல் செயலிலும் மேற்கொள்ள வேண்டும்எனவே இலக்கை அடைவதற்கு செயல் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 90 நாட்களே உள்ளனஅதாவது 3 மாத காலத்திற்குள் நல்ல முறையில் திட்டமிட்டு அதனை செயல்படுத்திமாணவர்கள் சாதனைகளை படைக்க வேண்டும்ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு ஓவரும் குறையும் போது வெற்றிக்கான ரன்களைகுறிப்பிட்ட பந்துகளில் அடிக்க வேண்டும் என்றநிலை வீரர்களுக்கு வரும்அதே போன்றுதான் இந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு, 90 நாட்களில் வருகிறதுஎனவே ஒவ்வொரு நாளையும்மாணவர்கள் வீணடிக்காமல்சாதனை  இலக்கை அடைய திட்டமிட்டு படிக்க வேண்டும்.

ஒரு செயலை செய்வதற்கு திட்டமிடுவதைப் போல அதனை செயல் படுத்துவதற்கு முயற்சியும் வேண்டும். மாணவர்கள் திட்டமிட்டபடி தங்களது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்பொதுத்தேர்வு எழுதக் கூடிய மாணவர்கள் பொதுவாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என வீட்டில் கடிகார அலாரம் வைப்பார்கள் அலார மணி அடித்ததும் சில மாணவர்கள் அலாரத்தை நிறுத்தி விட்டுபடிக்கும் முனைப்பு இல்லாமல் மீண்டும் தூங்க விரும்புவார்கள்  இது போன்று செயல்பட கூடாது.

 திட்டமிட்டபடியே செயல்படுத்த உரிய நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்நீங்கள் செயல் பட வேண்டும் என நினைப்பவர்கள்என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்அப்படி செய்யும் செயலை தெளிவாகச் செய்ய வேண்டும்ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ள பல கேள்விகள் எழுப்ப வேண்டும்சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள தயக்கம் காட்டக் கூடாது

நீங்கள் முழு திருப்தி அடையும்வரை நீங்கள் எடுத்த முயற்சியை கைவிடக்கூடாதுமாணவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு கவன ஒருமைப்பாடு என்பது மிக முக்கியமாகும்மனமும்ஆன்மாவும் நமது இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்மாணவர்கள் இந்த ஒரு மன ஒருமைப்பாட்டுடன் இருக்கும் போதுசுற்றுப்புறத்தில் ஏற்படக் கூடிய நிகழ்வுகள் ஏதும் அவர்களுக்கு இடையூறாக இருக்காதுமாணவர்கள் அதிகாலையில் படிக்கும் போது பேப்பர்காரர்பால்காரர்என பலர் வந்து போகும் ஒலிகள் காற்றில் கலந்து வரலாம்வீட்டில் உள்ளவர்கள் அதிகாலை நேரத்தில் பேசும் ஒலிகளும் கூட மாணவர்களை பாதிக்காத அளவில்தீவிர மன ஒருமைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இந்த மன ஒருமைப்பாட்டை எட்டுவதற்கு முதலில்ஏதேனும் வடிவத்தை அல்லது விருப்பமான வழிபாட்டு உருவை மனத்தில் சில நிமிடங்கள் நினைக்க வேண்டும் என்கிறார்கள்.  இத்தகைய பயிற்சியில் பக்குவம் பெறும்போது தியான நிலை எட்டப்படுகிறது அதைப் போன்றுதான் மாணவர்கள்தங்களது பாடங்களை படிக்கும் போதுமன ஒருமைப்பாட்டுடன் அதில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும் அப்படி படிக்கும் போதுஅவர்களை சுற்றி எழுகின்ற எந்த ஒரு ஒலியும் அவர்களை பாதிக்காதுபடிக்கும் பாடங்களை பிறகு படிக்கலாம் என ஒத்திப் போடும் மனநிலை கூடாது

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போது ஒரு கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் எனஅனைவரும் ஒரே நிறத்திலான சீருடை அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறதுபள்ளிக்கு வரும் மாணவர்களில் யாரும் ஏழைபணக்காரர் என்ற பேதம் கிடையாதுஇங்கு அனைவரும் சமம் என்பதையே வலியுறுத்தும் கோட்பாடுதான் சீருடைஅந்த சீருடையுடன் காலில் கறுப்பு நிற ஷீவையும் அணியச் சொல்வது உண்டுஇந்த 'ஷீவாங்கும் போது பளபளப்பாகநல்ல கறுமையுடன் இருக்கும் ஆனால் அதனை பயன்படுத்தும் மாணவர்கள் முறையாக பராமரிக்காத சூழலில் அது பல்வேறு நிறங்களை பெற்றிருக்கும்

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வரும் போது 'ஷீவை நன்கு பாலிஷ் செய்து போட்டுக் கொண்டு வரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்இந்த ஒழுங்கு முறை மனநிலையை நன்கு செம்மைப்படுத்தும்இது போன்ற அடிப்படை ஒழுங்கு எல்லா பள்ளிகளிலும்  மாணவர்களிடம் வெளிப்படும்இதன் மூலம் அவர்களது செயல்கள் அனைத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்வாழ்க்கையிலும் அவர்கள் சாதனை படைப்பவர்களாக உயர்வார்கள்.

மாணவர்கள் தாங்கள் அடைய வேண்டிய திறனை எட்டுவதற்கு தினம்தோறும் தொடர் பயிற்சி  மேற்கொள்ள வேண்டும்நீங்கள் யாரேனும் 100 சதவீத மன ஒருமைப்பாட்டுடன் பணியில் ஈடுபட்டால்நீங்கள் கடவுளுக்கு அருகே இருக்கிறீர்கள்” என்கிறார் விவேகானந்தர்நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முழுமையான மன ஒருமைப்பாடு தேவை.

உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள் தன்நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். காட்டு விலங்குகள் 5 அறிவு கொண்டவையாக இருக்கின்றனஅவற்றிற்கு ஒவ்வொரு நாளும் எங்கே உணவு தேட வேண்டும் என்பது கூட தெரியாதுமனிதர்களுக்கு மட்டும் தான் பகுத்தறியும்  6 வது அறிவு உள்ளதுதனால் உயரம்நல்ல குண்டுகறுப்புசிவப்புகுறிப்பிட்ட இனம் என தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. இவையாவும், நாம் நினைத்து அல்லது விருப்பப்பட்டு நாமே நமக்கு அமைத்துக் கொண்டதல்ல. இயற்கையாக அதுவாக அமைந்தது ஆகும். எனவே அத்தகையவற்றை நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது. தன்னம்பிக்கையும்மன ஒருமைப்பாடும் வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும்

ஒரு உண்மை  நிகழ்வு
 இரண்டு கையும்இரண்டு காலும் இல்லாத மனிதர் தரையில் விழுந்துமீண்டும் தலையால் எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை காட்சியை பார்க்க நேர்ந்ததுஅந்த மனிதர்தனது குறைகளை பற்றி கவலைப்பட்டு முடங்கி போகாமல் எழ வேண்டும் என்ற முயற்சிகளை விடாமல் செய்து வெற்றியும் பெறுகிறார்மனம் தளராமல் நாம் 100 முறை மீண்டும்மீண்டும் முயற்சிப்போம் என அந்த மாற்றுத்திறனாளிமன உறுதியுடன் சொல்கிறார்அவர் சொல்வதை போலநாம் மேற்கொள்ளும் செயலில் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்அந்த செயலில் இலக்கைஅடையும் வரை நமது முயற்சியைத் தொடர வேண்டும்தன்னம்பிக்கை உங்களிடம் இல்லை என்றால்நீங்கள் ஆயிரம் கடவுளை வணங்கினாலும் உங்களை ஒரு கடவுள் கூட காப்பாற்றாது என விவேகானந்தர் கூறுகிறார்நம் மீதும்நம் திறமை மீதும் நம்பிக்கை தேவைநம்மால் முடியும். நேரம் தவறாமை வெற்றிக்கு வழி வகுக்கும். ஒரு செயலில் வெற்றி பெற தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு மிக அவசியமாகும்.

நீங்கள் செல்லும் வழியில் பல தடைகள் இருக்கலாம்இருப்பினும் நீங்கள் செய்யும் செயலில் இருந்து தடம் புரளக் கூடாது. 1992 ம் ஆண்டு ஸ்பெயின் பாசிலோனாவில்  உலக நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டெரக் ரெமான்ட் என்ற வீரர் கலந்து கொண்டார்அவர்தான் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்ததுபோட்டியில் கலந்து கொண்டு அதிவேகமக அவர் முந்தி சென்றார். 150 மீட்டர் தூரம் வரைஅவர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்திடீரென அவருக்கு தசைபிடிப்பு ஏற்ப்பட்டு காலில் கடுமையான வலி ஏற்பட்டதுஅதன் பின்னர் அவரால் நிச்சயம் வெற்றியை எட்ட முடியாது என்பது தெரிந்ததுஇருந்தாலும் அந்த வீரர் தனது இலக்கு தூரத்தை எட்டி விட வேண்டும்.  என கண்ணீருடன் காலை நொண்டிய  படி வந்து கொண்டிருந்தார்கடுமையான வலியுடன் அவர் ஓடுவதை கண்டுபொறுக்க முடியாத அந்த வீரரின் தந்தை ஓட்டத்தை நிறுத்த கூறினார்ஆனால் அந்த வீரர் கேட்கவில்லைபின்னர் தனது தோளை பிடித்து கொண்டு வா என தந்தை வெற்றி இலக்கு கோடுவரை வந்தார்அவர் வெற்றி பெறாவிட்டாலும் இலக்கு தூரத்தை அடைந்த போதுஅரங்கத்தில் இருந்த 65 ஆயிரம் பார்வையாளர்கள் எழுந்து நின்று அந்த வீரரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்மறுநாள் அவரைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளும் புகழ்ந்தனர்

நீங்கள் ஒரு செயலில் வெற்றி பெறாவிட்டாலும் உங்களது முயற்சியை ஒருபோதும் கைவிடக் கூடாது இதைத் தான் அந்த வீரரும் செய்தார்அவரது விடாமுயற்சிக்கு இந்த உலகமே தனது பாராட்டை தெரிவித்ததுஎந்த சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.  
நாம் தான் முதல் கதாநாயகன் என்ற உங்கள் மீதான நம்பிக்கை இருக்கட்டும். “விழித்திருங்கள்எழுந்திருங்கள்இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராடுங்கள் என்று விவேகானந்தர் கூறுகிறார்பிளஸ் 2 பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் இன்னும் இருக்கின்ற 90 நாட்களில் தங்களது பாடங்களில் தீவிர கவனம் செலுத்திதிட்டமிட்ட மதிப்பெண்களை குவிக்க வேண்டும்மன ஒருமைப்பாடுதொடர் பயிற்சி ஒழுங்கு முறை இருந்தால் நீங்கள் நினைத்த மதிப்பெண் இலக்கை பெறலாம்நீங்கள் நினைக்கும் உயர் கல்வியில் சேர முடியும்

 இன்றைக்கு சாதாரண நடுத்தர மக்கள் கூட விமானத்தில் பயணம் செல்லும் நிலை இருக்கிறதுஇந்த விமானத்தை ரைட்சகோதரர்கள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்த போதுகடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்கள்மனிதன் பறக்க முடியுமாவிமானம் பறக்குமாஎன்ற ஏளனம் இருந்தது. பலரும் விமர்சித்தார்கள்ஆனால்அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட வில்லைதொடர்ந்து முயற்சித்தார்கள்விமானத்தை வானில் பறக்க விட்டு சாதனை படைத்தார்கள்அவர்களது தொடர் முயற்சி இன்றைக்குஅவர்களை மகத்தான சாதனையாளர்களாக ஆக்கி இருக்கிறதுஇலக்கை அடையும் வரை முயற்சியை கைவிடாதீர்கள்தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருங்கள்கஜினி முகமது என்ற மன்னனைப்பற்றி உங்களுக்குத் தெரியும் 16 முறை போரில் தோல்வியைத் தழுவினார்இருப்பினும் அவர் தோல்வியைக் கண்டு துவளவில்லை.

மன உறுதியுடன் 17 வது முறை போரிட்டார் வெற்றியை பெற்றார்இறுதியில் அவர் நினைத்த வெற்றி அவரது கைகளில் வந்து சேர்ந்ததுஇந்த நிகழ்வு அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியை காட்டுவதாக இருக்கிறதுபலமுறை கஜினி முகமது தோல்வியை தழுவியதால் சோர்வடைந்திருந்தால் இறுதியில் வெற்றியை பெற்று இருக்க முடியாது தோல்வியடையப் பெற்ற காலங்களில் அவர்தீவிரமான யோசனையில் இருந்த போது கூடு கட்டும் சிலந்தி பலமுறைகீழே விழுந்தாலும் முயற்சியை விடாமல் வலையை பின்னுவதைப்  பார்த்தார் பலமுறைவலையை பின்னுவதில் பின்னடைவு இருந்த போதும்அந்த சிலந்தி இறுதியில் அருமையான வலையை பின்னி முடித்ததைப் பார்த்தார்அந்த சிலந்தியின் விடாமுயற்சிகஜினி முகமதுவையும் தொற்றிக் கொண்டது. 17 வது முறை படையெடுத்தார் வெற்றியை எட்டினார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா. அவரது பிரச்சாரத்தின் தாரக மந்திரம் “எஸ் வீ  கேன் (நம்மால் முடியும்என்ற நம்பிக்கை முழக்கம்தான். கறுப்பர் இனத்தை சேர்ந்தவர். எனக்கு வெற்றி கிடைக்காது என ஒபாமா கருத வில்லை அவரது மன உறுதி தன்னம்பிகையால் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்தலில் ஒரு முறை அல்லஇரண்டாவது முறையும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தொடர்ந்து நீடிக்கிறார்.
முயற்சியை கைவிடாதீர்கள்
வெற்றி உங்களுக்கு தான்…..
                                          தொகுப்பு : எஸ். பி. கே 
 ****************************************************************************************************************


வெளிப்படையாக பேசுவதால் ஏற்படும் நிலை

ஒரு நபர் வெளிப்படையாக பேசுவதால் சிலருக்கு ஆறுதல் அல்லது மனக்காயத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே எதனையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசுவது நல்லது. நிதானமாக யோசித்து பேசும் திறன் ஒருவரின் பக்குவ நிலையை எடுத்து காட்டுகிறது. பேசுவதில் கடைப்பிடிக்கும் நிதானத்தைக் காட்டிலும் எழுத்தில் மிகுந்த கவனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இப்படி நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கையை கவனமாக நடத்தும் பக்குவத்தை பெற்று விடுகிறார்கள். சில விஷயங்கள் கசப்பான உண்மைகளை கொண்டிருக்கலாம். அவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. மற்றவர்களுக்கு துன்பம் தராத உண்மைகளைப் பேசுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெளிப்படையாக ஒருவர் பேசுவது, அவரின் நாணயத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.
அதேப்போன்று மற்றவர்களின் மன நிலையை அறிந்து கொண்டு பேசுவதும் நல்ல விஷயமாகும். இதனால் பேச்சுவார்த்தையின் போது, இருவரும் காயப்படாமல் இருக்கலாம்.
**************************************************
+2 படிப்புக்குப் பின் கல்லூரி தேடுதல்
12ம்  வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதும், கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை துவங்கி விடும். ஒவ்வொரு முக்கிய பட்டப்படிப்புக்கும், ஆயிர கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நெருக்கடி தலையை நீட்டிக் கொண்டு இருக்கும்.
தோராயமாக கல்லூரிகளைத் தேர்வு செய்து விண்ணப்பிப்பதைக் காட்டிலும், நகரின் முக்கியமான கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற திட்டமிடல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உள்ளது. இந்தியாவின் தலைச் சிறந்த கல்லூரிகளான செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி (தில்லி),கிறிஸ்ட் பல்கலைக்கழகம் (பெங்களூர்), செயிண்ட் சேவியர் (கொல்கத்தா), லயோலா (சென்னை) போன்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சர்வதேச ரீதியாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் எம் ஐ டி (அமெரிக்கா) கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) ஆகியவை மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனங்களாக உள்ளன.
இந்தக் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. உயர்கல்வியை எந்த கல்லூரியில் பயில்வது என்பது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் இணையதளத்தின் உதவியை நாடுகிறார்கள். ஆனால் இணைய தளத்தில் அவர்கள் தேடும் தகவல்கள் மிகக்குறைவான அளவிலேயே உள்ளது.
இணையதளத்தில் காணப்படும் தகவல்களில் பல ஆதாரமற்றதாகவும், பாரபட்சமானதாகவும் உள்ளது. என்ன பாடத்தில் படிப்பது என்ற திட்டமிடல் இல்லாமலேயே, மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லூரியில் ஒரு மாணவர் சேர்ந்தால் அதே கல்லூரியில் சேரவேண்டும் என்ற எண்ணம் அவரைச் சார்ந்த இதர மாணவர்களுக்கும் ஏற்படுகிறது.
பிரபலமான கல்லூரியில் சேர வேண்டும் என்பதே மாணவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதனால், பல ஆண்டுகள் கல்விச் சாதனை படைக்கும் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம் சக மாணவர்களிடம் தங்களது நிலையை உயர்த்திக்காட்டுகிறார்கள்.
பிரபலமான கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நிறுவனங்களின் நேர்காணல் வாய்ப்புக்களும் அதிகம் வருகின்றன.  ஆனால் உரிய படிப்பு, உரிய கல்வியறிவு பெறும் மாணவர்களுக்கே நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எந்தக் கல்லூரியில் சேருகிறோம் என்பதைக் காட்டிலும் என்ன பட்டப் படிப்பை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியமானது ஆகும்.
மிகச்சிறந்த கல்லூரியில் அதிக தரமில்லாத படிப்பை தேர்வு செய்யும் போது நன்மையை விட தீமையே ஏற்படுகிறது. மாணவர்கள் தங்களது தேவையை அடையாளம் காண வேண்டும். அதே நேரத்தில் தங்களது நீண்ட கால இலக்குகளை பட்டியலிட வேண்டும்.
குறிப்பிட்ட கல்லூரியில் சேருவதற்கு முன்னர் மாணவர்கள் தங்களது எதிர் பார்ப்புகள் என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். மாணவர் குறிப்பிட்ட பட்டப் படிப்பைத் தேர்வு செய்த பின்னர் அதனை எங்கு படிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர் சர்வதேச அளவில் படிக்க வேண்டும் என விரும்பினால் அதற்குரியவற்றை திட்டமிட்டு தேர்வு செய்ய வேண்டும்.
தனித்திறன்களை பொருத்து மாணவர்கள் புற நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லூரியை தேர்வு செய்யலாம். பல்கலைக்கழக வளாகப்பகுதியில் மாணவர்களுக்கு, தாங்கள் எதனைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்கிற ஆலோசனை அனுபவம் கிடைக்கும்.
***************************





பொதுத்தேர்வு எழுதும்

மாணவர்களுக்கு


ப்ரீ போர்டு (Pre-board) தேர்வுகளை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. போர்டு தேர்வுகளை நாம் எப்படி எழுதப்போகிறோம் என்பதற்கு முன்மாதிரியாக ப்ரீ- போர்டு தேர்வுகள் உள்ளன. மார்ச் மாதம் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ப்ரீ-போர்டு தேர்வு என்பது மிக முக்கியமானது.  நீங்கள் படித்த பாடங்களை எப்படி புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காட்டுவதாக ப்ரீ-போர்டு தேர்வுகள் இருக்கின்றன.

இந்தியா முழுவதும் இந்த +2 தேர்வு நடை பெறுகிறது. தேர்வை உரிய நேரத்தில் முடிக்க முடிகிறதா? என்பதை நிர்ணயம் செய்து தேவையான திருத்தங்கள் செய்து கொள்வதற்கு ப்ரீ-போர்டு தேர்வுகள் உதவுகின்றன.

இந்த ப்ரீ-போர்டு தேர்வுகள் உண்மையானத் தேர்வைக் காட்டிலும் கடினமானதாகவே இருக்கிறது. இந்த தேர்வை நம்பிக்கையுடன் எழுதினால்தான் போர்டு தேர்வில் பதட்டம் இல்லாமல் அதிக மதிப்பெண்களை குவிக்கும் வகையில் பதில் எழுத முடியும். எப்போதும் மனதை தளர விடாதீர்கள் ப்ரீ-போர்டு தேர்வு என்பது மாதிரித் தேர்வுதான். அதன் கேள்வி அமைப்பு உங்களை பயமுறுத்தினாலும் அதற்கு எப்படி பதிலளிப்பது என்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களது பலவீனமான நிலை எது என்பதை கண்டறியுங்கள். அதுபற்றி ஆசிரியர்களிடம் விவாதியுங்கள், நிபுணர்களிடம் விவாதியுங்கள். இப்படி அனுபவம் வாய்ந்த நபர்களுடன் பேசுவதால் உங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கை கிடைக்கும்.

உங்களுக்கு சந்தேகம் உள்ள பாடத் தலைப்புகள் பற்றி விளக்கம் கேட்பதற்கு தயக்கம் கூடாது. அதனை, உடனடியாக களைவதற்கு, ஆசிரியர்களின் உதவியைக் கேளுங்கள். ப்ரீ-போர்டு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு சில எளிய டிப்ஸ்கள் உள்ளன. புத்தகத்தை முழுமையாகப் படியுங்கள் அனைத்து உதாரணங்களையும் படித்து முடித்ததை உறுதிபடுத்துங்கள்.





 கேள்விகள் குறித்து உங்களது சக நண்பர்களிடம் விவாதியுங்கள். மாணவர்களுடன் கூட்டாக சேர்ந்து விவாதிப்பது நல்ல பலனைத் தரும். கடினமான கேள்விகளை எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்த வழிமுறை உதவும்.

உங்களுக்கு கேள்வியில் சந்தேகம் வந்தவுடன் அதற்கு தீர்வு காண்பதற்கு வழி தேட காலம் தாழ்த்தக் கூடாது. காலம் தாழ்த்துதல் என்பது நேரத்தை திருடும் திருடன் ஆகும். குறிப்பிட்ட கேள்விக்கு முழுமையாக பதிலளிக்கும் வரை பயிற்சியைத் தொடருங்கள் பாடம் சம்பந்தமாக உங்களுக்கு கிடைக்கும் ஆதார வளம் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.

நீங்கள் படித்த பாடங்களை மீண்டும் புரட்டி பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் தேர்வு நேரத்தில், பயம் உங்களிடம் எட்டிப்பார்க்காது. இரவில் நன்றாக தூங்குங்கள் வழக்கான பணிகளை புறக்கணிக்காதீர்கள். முந்தய ஆண்டில் கேட்கப் பட்ட தேர்வு கேள்வித் தாள்களையும் பாருங்கள். அதில் இருந்து தற்போதைய பொதுத் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படலாம்.

எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்யும் பழக்கத்தை கை விடுங்கள். பாடத்தை புரிந்து படியுங்கள். சூழலுக்கு ஏற்ப எப்படி பதிலளிப்பது என்பதை உணர்ந்து படியுங்கள். நீண்ட செய்முறை கேள்விகளுக்கு பதிலை தயாரான முறையில் வைத்திருங்கள் பதட்டமில்லாமல் அதனைத் தேர்வில் செய்வதற்கும் மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதுவதுடன், அதற்குரிய படங்களையும் வரையுங்கள். 

*********************************************



பதட்டம் தவிர்த்தால்
மாணவர்களுக்கு வெற்றி

தேர்வு எழுதும் மாணவர்கள் கீழ்க்கண்ட முறைகளை கடை பிடித்தால் போதும். அவர்களைத் தேடி வெற்றி ஓடிவரும்.
·         தேர்வு எழுதுவதற்கு முன்னர் முந்தய நாள் இரவில் பதட்டம் இல்லாமல் 7 மணி நேரம் நன்றாகத் தூங்க வேண்டும்.
·         காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
·         உடலில் நீர்ச் சத்து இருப்பதற்காக, தேர்வு எழுதுவதற்கு முன்னர் சிறிது தண்ணீர் குடித்துச் செல்ல வேண்டும்.
·         தேர்வு எழுதிய பின்னர் மனதை ரிலாக்ஸ் செய்து சிறிய அளவில் ஸ்னாக்ஸ் பொருட்கள் அல்லது மதிய உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். சிறிது நேர ஓய்விற்குப் பின்னர் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்களை பார்க்க வேண்டும். அப்போது ஆர்வமாக படிக்கத் தூண்டும்.
·         தேர்வு நேரங்களில் துரித உணவு (பாஸ்ட் புட்) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய உணவுகள் தூக்க நிலையை ஏற்படுத்தலாம்.
·         வீதிகளில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் தொற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
·         வீட்டில் சமைத்த உணவையே சாப்பிடுவதால் ஆரோக்கியமான உடல் நிலையை நாம் பராமரிக்க முடியும்.
·         தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது. மாணவர்கள் தேர்வு என்றதும் ஒருவித பதட்டத்துடன் இருப்பார்கள். இந்த பதட்டத்தைத் தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பது நல்லது.
·         தேர்வு நேரத்தில் எதனையும் புதிதாகப் படித்து அதனை உணர முடியாது. ஏற்கனவே படித்த பாடங்களை நினைவு கூறும் வகையில் அதனை திரும்பி படித்து நினைவு கூற வேண்டும்.
·         தேர்வு நேரத்தில் எந்த விதப் பதட்டமும் இல்லாமல், வழக்கம் போல, இயல்பான மன நிலையுடன் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும்.

இப்படிச் செய்தால் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
 *************

  ஆங்கிலத்தை அறிய அச்சம் வேண்டாம்

உயர் கல்வி என்பது பல நிறுவனங்களில் ஆங்கில மொழி வாயிலாகவே உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் பள்ளி பருவத்தில் இருந்து ஆங்கிலத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. தாய் மொழியில் படிப்பது பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், ஆங்கில மொழியை நங்கு அறிந்து கொள்வதால் பல இடங்களில் நமது கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க முடியும்.
புதிய நபரைச் சந்திக்கும் போது, ஆங்கிலம் தெரிந்து இருக்கும் பட்சத்தில் புதிய நபருடன் கருத்து பரிமாற்றம் என்பது பிரச்சனையாக இருக்காது. ஆங்கில மொழியை நன்கு அறிந்து கொள்வதன் மூலம், மாணவர்கள் மற்றும் பாடதிட்டங்களுக்கு இடையே மொழி ஒரு பிரச்சனையாக இருக்காது.
புதிய மொழியை, ஆங்கில மொழியை கற்கும் போது மாணவர்கள் தங்களிடம் உள்ள தயக்கத்தை தூக்கி எறிய வேண்டும். தொழில் நிபுணத்துவ கல்லூரிகள் தங்களது மாணவர்கள், ஆங்கில மொழியில் நல்ல திறனைப் பெறுவதற்கு வெளியில் இருந்து ஆங்கிலம் போதிக்கும் பயிற்சியாளர்களை அழைக்கிறார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து ஆங்கில மொழி தொடர்பாகப் போதிக்கும் போது, ஆங்கில மொழி ஒரு தடையாக இருக்காது.
மாணவர்கள் ஆங்கிலத்தில நேர்த்தியாக எழுதுவதற்கும் தயாராக வேண்டும். ஒரு மொழியில் புலமை பெறுவது என்பது புனிதத்துவமானது.

 *********
 சுற்றுச்சூழல் நூலகம்

தார்வாட்டில் கர்நாடக பல்கலைக்கழகம் அமைந்து இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகம் இயற்கைச் சூழலில் கண்ணைக் கவருவதாக அமைந்துள்ளது. அழகானப் பூக்கள், குளுமையான காற்று மற்றும் கிரீச், கிரீச் என இனிய ஓசை எழுப்பும் பறவைகள் என இந்த பல்கலைக் கழக வளாகம் அமைந்து இருக்கிறது. இந்த இயற்கை அழகின் நடுவில் இந்த பல்கலைக்கழகத்தின் நூலகம் அமைந்து இருக்கிறது.
இத்தகைய சூழல் மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.  அழகான தோட்டத்தின் நடுவில் இந்த நூலகம் அமைந்து இருக்கிறது. இந்த நூலகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.பி வாலிகரின் சிந்தனையில் உருவானது ஆகும்.
கர்நாடக மாநிலத்திலேயே இத்தகைய சுற்றுச் சூழலுடன், இயற்கையை ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் முதல் நூலகம் இதுவாகும். மாணவர்கள் தங்களது பாடம் குறித்து ஆலோசனை செய்வதற்கும் இந்த நூலகத்தில் வசதி வாய்ப்புகள் உள்ளன.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கூட இந்தச் சுற்றுச்சூழல் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கையுடன் இணைந்துள்ள இந்த நூலகம், பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்து  சற்று தள்ளியே அமைந்து இருக்கிறது.
நூலகத்திற்கு அருகாமையில் முதுநிலை பட்டப்  படிப்பு படிக்கும் மாணவர்களின் துறைகள் உள்ளன. பிரதான நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப் படுகிறது. ஆனால் அங்கு மாணவர்கள் குழுவாக ஆலோசனை செய்ய முடியாது. நூலகத்தின் உள்பகுதியில்தான், மாணவர்கள் தங்களது பாடம் தொடர்பாக ஆலோசனை செய்ய முடியும்.
மாணவர்கள், நூலகப் புத்தகங்களைப் படிப்பதற்கு புல்வெளி, மற்றும் கல் பெஞ்சுகள் மற்றும் டேபிள்களை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இவை போதுமான இடைவெளியில் அமைந்து இருக்கின்றன. இந்த இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள நூலகம், மாணவர்களுக்கு மேலும் இனிமையைச் சேர்க்க, தலா ரூ.35 லட்சம் செலவில் இரு கூரைகள் போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை நூலகத்திற்கு கூடுதல் ஈர்ப்பை தருகின்றன. இந்த கூரை போன்ற அமைப்பின் கீழ் 35 மாணவர்கள் அமர்ந்து படிக்கலாம். இந்த இடம் பாடம் குறித்த ஆலோசனை செய்வதற்கும், கூட்டாக சேர்ந்து படிப்பதற்கும் உதவுகிறது.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த இடத்தில் அமர்ந்து படிக்கும் போது கூடுதல் நேரம் படித்து, வெற்றி இலக்கை எட்டும் வாய்ப்பும் அதிகரிக்கும். அப்படி ஒரு ரம்மியமானச் சூழலில் இந்த நூலகம் அமைந்து இருக்கிறது.
****************
வாழ்க்கை இனிமையானது
வாழ்க்கை இனிமையானது வாழ்க்கையில் இனிமையாக உள்ள அனைத்து விஷயங்களையும் மூளை ரசிக்கிறது. நாம் ரசிப்பதற்கு உரிய திறனைப் பெற்றிருக்கிறோம். இன்றைக்கு நாம் அவசரயுகத்தில் இருக்கிறோம். பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் அவசரமாக டியூசன் படிப்பை தொடர்வதற்கு ஓடுகிறோம்.
எனவே அழகு எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் ரசிக்கத் தவறுகிறோம். தெருக்களில் குப்பை இருந்தாலும் அதை உணர முடியாத அளவிற்கு நாம், அவசர கதியில் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் அழகு உள்ளது. அதனை தொட்டோ சுவைத்தோ அல்லது கேட்டோ, அல்லது நுகர்ந்தோ உணர முடியாது இருப்பினும் அழகின் தன்மையை  உணர முடியும்.
அழகை ரசிப்பதற்கு நமது பணப் பையை திறக்க வேண்டியது இல்லை. நாம் நமது மூளையை பயன்படுத்தினால் போதுமானது. அழகு நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் இருக்கிறது. அழகை நாம் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  நிமிடமும் அழகானதுதான். அதனை நாம் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
******************

பயமே பலவீனம்
                         -    விவேகானந்தர்
விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த 2013ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டதுவிவேகானந்தர் 1863ம் ஆண்டு சனவரி 12ம் தேதின்று பிறந்தார்இவரது பெற்றோர் விசுவநாதர் - புவனேஸ்வரிபெற்றோர் இவருக்கு வைத்தப் பெயர் நரேந்திரநாத்சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றிய போது எனது சகோதரர்களேசகோதரிகளே என உரையை துவக்கி அமெரிக்க மக்கள் உள்பட உலக இளைஞர்களை தன் பக்கம் திரும்ப வைத்தவர்இளைஞர்களுக்கு அவர் அளித்த உறுதிமிக்க வார்த்தைகள் இதோஒருபோதும் பயம் கூடாதுஉங்கள் உடல்மனம்அறிவு இம்மூன்றையும் பலவீனமாக்கும் எதனையும் நஞ்சென்று ஒதுக்கிவிடுங்கள்அவற்றை மனதில் திணிக்காதீர்கள்வஞ்சனையால் எதையும் சாதிக்க முடியாதுஅன்பாலும்உண்மையாலும் பெரிய செயலைக் கூட எளிதாகச் செய்துவிட முடியும்

பயமின்மையே வாழ்வின் ரகசியம்நமக்கு என்ன நேருமோ என்று ஒருபோதும் பயப்பட வேண்டாம்பிறரிடம் இருந்து வரும் உதவியை மறுக்கின்ற அந்தக்கணமே சுதந்திரம் வந்துவிடும்நியாயமான கோபம் என்று உலகில் இல்லைஏனெனில் அனைத்தையும் சமமாகக் காணத்தவறுவதால் கோபம் உண்டாகிறதுஎண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள்நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களை திறந்து வைப்பது நமது கடமை என்கிறார்.   

குறி தவறாத துப்பாக்கி

எந்தச் செயலுக்கும் உரிய பயிற்சி இல்லாதபோதும்மன ஒருமைப்பாடு இருந்தால் வெற்றியைஇலக்கை எட்டலாம் என்கிறார் விவேகானந்தர்ஒருநாள்துப்பாக்கி சுடும் களத்திற்கு விவேகானந்தர் வந்தார்அங்கே இருந்தவர்கள் பல நாட்கள் அங்கு பயிற்சிக்கு வருபவர்கள்அவர்களது துப்பாக்கிச்சூடு சரியான இலக்கை அடையவில்லைபலமுறை சுட்டும் பலன் இல்லைஅதனைமெளனமாக பார்த்துக் கொண்டிருந்த விவேகானந்தர் சிறிய புன்னகை செய்தார்

அருகே இருந்தவரிடம் துப்பாக்கியை வாங்கி சுட்டார்அதில் இருந்து புறப்பட்ட குண்டு இலக்கை குறி தவறாமல் துளைத்ததுஅங்கே இருந்தவர்கள் அவரிடம் ஆச்சரியத்துடன் கேட்டனர் - நீங்கள் நீண்ட காலம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறீர்களாஎன்றுவிவேகானந்தர் அப்போது கூறுகையில் ஒருபோதும் இந்த பயிற்சியை செய்தது இல்லைநீங்கள் குறிப்பிட்ட இலக்கை துப்பாக்கி குண்டால் துளைக்க வேண்டும் என மனதை ஒருமுகப்படுத்தினேன்இலக்கு தெளிவாக தெரிந்ததுசரியாகச் சுட்டேன் என்றார்பயிற்சி இல்லாவிட்டாலும் புதியத் துறையில் தீவிர கவனம்மன ஒருமைப்பாடு காட்டினால் வெற்றி பெறலாம் என அவர் சொன்னார்விவேகானந்தரின் இந்த வெற்றியின் ரகசியம்வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி மரணம் அடைந்தார்அவர் இந்த பூமியில் வாழ்ந்த காலம் 39 வருடம் 5 மாதம் 24 நாட்கள். 
      MR. PREM KUMAR.

       
 ****************

      
தள்ளிப்போடாதீர்கள்

      நீங்கள் செய்ய வேண்டியப் பணிகளை பிறகு செய்து கொள்ளலாம் என தள்ளிப் போடாதீர்கள்எந்த ஒரு விஷயத்தையும்திட்டமிட்டு செயல்படுத்துங்கள்இலக்கை எளிதாக அடைய முடியும்நீங்கள் செய்ய வேண்டிய கல்வித் திட்டங்களை நிர்ணயிக்கப் பட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும்அப்படி செய்யாதப் பட்சத்தில் வாய்ப்புகள் பறி போகலாம் அல்லது  நமது வாழ்க்கையை திசைதிருப்புவதாக அமைந்து விடலாம்.

         எதையும் தள்ளிப்போடும் மனோபாவத்தை உடனடியாக கைவிடுங்கள்இன்றைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனே செய்து விடுங்கள்மாணவர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கல்வி பாடங்களுக்கான நேரத்தை அறிந்து இருப்பார்கள்இருப்பினும் அவர்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனதங்களது பணிகளை தள்ளிப்போடுவார்கள்அந்த நேரத்தில் அவர்கள் சந்தோஷமாக பொழுது போக்குவார்கள்கடைசி நாள் வரை இப்படி ஜாலியாக இருந்து விட்டுகடைசி  நேரத்தில்பதட்டப்படுவார்கள்

      இதனால் அவர்களால் செய்ய வேண்டிய பாட திட்டங்களை முழு திறனுடன் செய்ய முடியாதுதோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம்தன்னம்பிக்கை முனைப்பு குறைவுகவலை போன்றவைகளால் மாணவர்கள் தங்கள் பணிகளை தள்ளிப் போடுகிறார்கள்இதனை ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறதுசில மாணவர்கள் இலக்குகளை தவிர்க்கவே பார்க்கிறார்கள்கவலையை தவிர்ப்பதற்காகவும் மாணவர்கள் தங்கள் பாட திட்டப் பணிகளை தள்ளிப்போடுகிறார்கள்தங்களால்,  பாடத் திட்டத்தை ஒழுங்காக செய்யமுடியாது என மாணவர்கள் கருதுவதால் இந்த தள்ளிப்போடும் மனோபாவம் ஏற்படுகிறது

            குறிப்பிட்ட பாட திட்டத்தை நிறைவேற்ற குறைந்த நேரமே போதும் என மாணவர்கள் தப்புக் கணக்கு போடுகிறார்கள்தள்ளிப்போடும் மனோபாவத்தைத் தவிர்த்தால் இலக்கை அடைவது மிக எளிதாகும்இலக்கின் அளவைப் பார்த்து சில நேரங்களில் மாணவர்கள் திகைத்துப் போகிறார்கள் இதனால்அவர்கள் அந்த இலக்கை அடைவதற்குதுவக்கப் பணிகளைக் கூட செய்வது இல்லைதுவக்கக் கட்டத்தில் மிக எளிதான இலக்குகள் எடுத்துசெயல்படுத்துங்கள்இதன் மூலம் உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும்இதனைத் தொடர்ந்து கடினமான இலக்கை தேர்வு செய்து அதனை அடைய முயற்சி செய்யுங்கள்வெற்றி கிடைக்கும்.
-     எஸ்.பி
***********************************************************************************

தண்ணீர்தண்ணீர்!

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்?


     நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் உள்ளது உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கடத்தும் வேலையைத் தண்ணீர்தான் செய்கிறதுநுரையீரலுக்குச் சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறதுதண்ணீர் இல்லாவிட்டால்  நம் உடலில் உள்ள மூட்டுக்களின் வழவழப்புத் தன்மைபோய் மூட்டுக்கள் தேயத் தொடங்கிவிடும்சுருக்கமாகச் சொன்னால் தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் தேவை.

   நம் மூளை செயல்பட 90% தண்ணீர் அவசியம்உடலில் எப்போதெல்லாம் நீர்ச்சத்து குறைகிறதோ அப்போதெல்லாம் மூளையில் செயல்பாடு குறையும்நோய்கள் ஒவ்வொன்றாக வரும்அதன் முதல் அறிகுறி தலை வலியாகத்தான் இருக்கும்உடற்சோர்வு மயக்கம் வரும்ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது கூடக் கட்டாயமில்லைஒருவரின் உடல் வாகு வாழும் இடம் செய்யும் வேலைக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?
                நாம் உணவை உண்ணத் துவங்கியதுமே நம் வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்க ஆரம்பித்துவிடும்அந்தச் சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் சேர்த்து உட்கொண்டால் அந்தத் தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்த்து ஜீரணப் பணியைப் பாதித்துவிடும்எனவே சாப்பாட்டினிடையே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

விக்கல் எடுக்கும்போது தண்ணீர் குடிக்கலாமா?
    அதிக காரம்உப்புவிக்கல்உணவுப்பொருள் தொண்டையில் அடைத்தல் போன்ற சிக்கல் வந்தால் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்உணவுக்கு முன்பும் பின்பும் ஒரு மணிநேர இடைவெளியில் தண்ணீர் பருகலாம்சாப்பிட்டு முடித்தும் வயிறுமுட்டத் தண்ணீர் குடித்தால் ஜீரணம் தடைப்படும்சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கலாம்                    
                                                                                                                                                                         உமாப்ரியதர்ஷினி (IX. D)
***************************
தேசிய ஆற்றல் தினம்
சேமிப்பே உற்பத்தி

     நாட்டில் தற்போது கிடைக்கும் நிலக்கரிகச்சா எண்ணெய்மின்சாரம் என பல ஆற்றல் சக்திகளும் மறைந்து வருகின்றன. 50 ஆண்டுகளில் இந்த ஆற்றல் வளம் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

     ஆற்றல் சக்தியை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 14 ம் தேதி தேசிய ஆற்றல் சேமிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறதுஎரிசக்தியை குறைவாக பயன்படுத்தினால் அதுவே சேமிப்பாக மதிப்பிடப்படுகிறதுஇந்த சேமிப்பு உற்பத்திக்கு சமமானது ஆகும்எரிசக்தியை தற்போது உற்பத்தியை விடஅதிகம் செலவழித்து வருகிறோம்.

ஆற்றல் சேமிப்பு  வழிகள்:
  • மின்சாரத்தை அவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்வரவிருக்கும் ஆண்டுகளில் சூரிய மின்சாரம் பிரதான பங்குவகிக்கும்.
  • கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதுஇதனைச் சார்ந்தே இதர பொருட்களின் விளையும் உள்ளதுஎனவே பெட்ரோல் சார்ந்த கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கமோட்டார் வாகனங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
*******************

டெங்கு நாதனே வருக!

அன்புள்ள மாப்ளே 'மலேரியாவாசுதேவனுக்கு,

        தமிழ்நாட்டில் இருந்து 'டெங்குநாதன் எழுதுவது நலம் நலம் அறிய ஆவல்சென்ற வாரம் நீ எழுதிய கடிதம் கிடைத்ததுடெல்லியில் சத்தான ரத்தம்  கிடைக்காமல் நீ வறுமையில் வாடுவதைப் படித்தபோது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த  முடியவில்லை கெட்டும் பட்டணம் போவதெல்லாம் வீணாப் போன மனுஷங்களுக்குத் தான் நமக்கில்லை நீ என்ன பண்ற... உடனே ஏதாவது சரக்கு லாரி தார்ப்பாயைப் புடிச்சுதமிழ்நாடு வந்து சேரு.

         கொசுவர்த்தி கொசு வலை சுருள்.... வரை எப்படித் தப்பிக்கிறதுங்கிற 15 நாள் ட்ரெயினிங் முடிச்சு உடனே டியூட்டில ஜாயின் பண்ணிக்கலாம்மற்றவை நேரில்.


                                          அன்புடன் மச்சான் 'டெங்குநாதன்.
.காயத்ரி  XI-D1




  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.